Ad Code

Responsive Advertisement

கற்பித்தல் திறன் பதிவு ஆசிரியர்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

புதுமைøயான கற்பித்தல் திறன்களை, இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான அவகாசம், வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், புதுமையான முறைகளை கையாள, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்கம் மூலம், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 

இதை பின்பற்றி ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்; வேறுசிலர், தங்களது எண்ணப்படி வித்தியாசமான முறைகளை கையாண்டு, மாணவர்களின் திறனை மேம்படுத்துகின்றனர்.புதுமையான கற்பித்தல் வழிமுறைகளை, அனைத்து ஆசிரியர்களும் அறிந்து பயன் பெறும் வகையில், அந்த முறையை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை, மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆசிரியர்கள் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு, உடுமலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில்,tணண்ஞிஞுணூt.ணிணூஞ்/டிணணணிதிச்tடிணிண என்ற இணையதள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.புதுமையான கற்பித்தல் திறன்கள் குறித்து, இந்த இணையதளத்தில் பதிவு செய்ய, கடந்த 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 25ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களுக்கு,99767-08768 என்ற எண்ணை, ஆசிரியர்கள்
தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement