பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மாநிலம் முழுவதும் பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தேர்வில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளிகளுக்கான செய்முறைத் தேர்வு கால அட்டவணை தயாரித்தல், தேர்வு கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்களை நியமித்தல், செய்முறைத் தேர்வுக்குத் தேவையான ஆய்வகக் கருவிகளை உறுதிசெய்தல் உள்ளிட்டப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு செய்முறைத் தேர்வு நடத்தும் பொறுப்பு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒப்படைத்துள்ளது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வின் மதிப்பெண் பட்டியலை பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 31 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை