தமிழக அரசின் அரசாணைப்படி, பார்வையற்ற முதுநிலைப் பட்டதாரிகள் 200 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பார்வையற்ற மாணவர்கள் வலியுறுத்தினர்.
அரசாணை எண்.260-இல் குறிப்பிட்டுள்ளபடி, 200 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பார்வையற்ற பட்டதாரி மாணவர்களைப் பணியமர்த்த வேண்டும்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் 550 பார்வையற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும்.
கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு "நெட்', மாநில அளவிலான தகுதித் தேர்வு "செட்' தேர்வுகளில் தகுதிபெற்ற 100 பார்வையற்ற பட்டதாரிகளுக்கு சிறப்பு நேர்காணல் நடத்தி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும்.
படித்து முடித்து வேலையில்லாத பார்வையற்ற மாணவர்களுக்கான உதவித் தொகையை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக நீதிமன்றம் தலையிட்டும், எங்களுடைய கோரிக்கைகள் இன்று வரை ஏற்கப்படவில்லை.
எனவே, இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் சங்க நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேச்சு நடத்த வேண்டும். இல்லையெனில், மீண்டும் மார்ச் மாதத்தில் தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை