நிகழாண்டில் 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
கடந்த 2013-14 ஆம் ஆண்டில் 14 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நிகழாண்டில் மாவட்ட கல்வித் துறை அதிகாரி, சுகாதாரத் துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்கள், குரூப் 1, 2, 4 பிரிவுகளில் தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான தேர்வுக் கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, இரண்டு நிமிஷங்கள் அமைதி அனுஷ்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் தலைமையில் அதிகாரிகள்-ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை