Ad Code

Responsive Advertisement

அரையாண்டு விடுமுறை: இரு செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்

அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அடுத்த இரு செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்றும் பராமரிப்பு பணிகளுக்காக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்களுக்கு விடுமுறை தினமாகும். எனினும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு பூங்காவை திறந்து வைக்க பொது மக்களிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 23 மற்றும் டிசம்பர் 30 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை வழக்கம் போல் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement