அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அடுத்த இரு செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்றும் பராமரிப்பு பணிகளுக்காக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காக்களுக்கு விடுமுறை தினமாகும். எனினும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு பூங்காவை திறந்து வைக்க பொது மக்களிடமிருந்தும் மாணவர்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 23 மற்றும் டிசம்பர் 30 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை வழக்கம் போல் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை