தேனியில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற அரசுப் பள்ளி மாணவர் ர.ஜீவானந்தம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். தேனி அல்லிநகரம் காந்திநகர் காலனியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ஜீவானந்தம். இவர், இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஜீவானந்தத்தின் தாயார் மாரியம்மாள் அளித்த புகாரின் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
இந்த நிலையில், ஜீவானந்தம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
எனவே, இப் பிரச்னை குறித்து முழு விசாரணை நடத்தவும், மாணவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் டி. வெங்கடேசன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு கூறுகையில், இப்பிரச்னை தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் ஏற்கெனவே துறை ரீதியிலான விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை