பொதுத்தேர்வு நெருங்குவதால் நடப்பு கல்வியாண்டில் இனி ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று பள்ளி கல்வி செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் கலந்தாய்வு நடந்து முடிந்த பின்னரும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில் நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களை இனி மேற்கொள்ள வேண்டாம் என்றும், அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வி செயலாளர் சபிதா பள்ளி கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான உத்தரவில் அவர் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டில் பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. இப்போது ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களை மேற்கொண்டால் தொடர்ச்சியான கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படும். மாணவர்களின் கற்கும் திறனும் பாதிக்கப்படும். நிர்வாகத்திலும் இது இடர்பாடுகளை ஏற்படுத்தும். எனவே இக்கல்வியாண்டு முடியும்வரை ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் ஏதும் மேற்கொள்ளக்கூடாது என்று அரசாணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை