அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாத கால குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி தொழில்நுட்பப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும், சென்னை தெற்கு ரோட்டரி சங்கமும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக வழங்கும் இந்த இலவசப் பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வித் தகுதி ஒன்றை வழங்கும் நோக்கத்தில் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சியில் மொத்தம் 50 பேர் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
பயிற்சி வகுப்பு 2015 ஜனவரி 3-ஆவது வாரத்தில் தொடங்கி 2015 ஜூன் மாதம் ரை நடத்தப்படும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சி.பி.டி.இ. வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 044 - 22358601.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை