இஸ்ரோ தலைவர் பெருமிதம்:
"இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் அடுத்த மைல் கல்லாக கருதப்படும் இந்த முயற்சி வெற்றி பெற்றது. இதில் பெருமிதம் அடைகிறேன். சாதனை வெற்றியை நிகழ்த்த உதவிய அனைவருக்கு என் மனமார்ந்த நன்றி. திட்டமிட்டபடி மாதிரி விண்கலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டது" என இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மாதிரி விண்கலம் திட்டமிட்டபடி கடலில் விழுந்தது:
விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் சுமார் 126 கி.மீ தூரம் வரை சென்ற பிறகு, மனிதன் பயணிப்பதற்கான மாதிரி விண்கலம் மட்டும் சுமார் 19-வது நிமிடத்தில் திட்டமிட்டபடி அந்தமான் அருகே கடலில் விழுந்தது.
அதை கொண்டுவர அப்பகுதியில் கடற்படையும், விமானப்படையும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. கடலில் இருந்து மீட்கப்படும் விண்கலம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் மைல் கல்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சிக்காக மனிதனை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்ப பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக இஸ்ரோ வரலாற்றில் முதல் முறையாக 630 டன் எடை கொண்ட ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட், 3,735 கிலோ எடை கொண்ட, விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதன் பயணிக்கும் மாதிரி விண்கலத்தை சுமந்து செல்லவிருக்கிறது. இது மனிதன் விண்ணுக்குச் சென்று மீண்டும் பூமியை வந்தடைவதற்கான பரிசோதனையே.
இந்த ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
முன்னதாக ராக்கெட்டின் அனைத்து பாகங்களும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள பாகங்களை பொருத்தும் மையத்தில் பொருத்தி முழுமையான ராக்கெட் உருவாக் கப்பட்டது. அப்போது மனிதன் பயணிக்கும் மாதிரி விண்கலமும் அதில் பொருத்தப்பட்டது. பின்னர் முழுமையடைந்த ராக்கெட், ராக்கெட் ஏவுதளத்துக்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அதையடுத்து, ராக்கெட்டில் திரவ எரிபொருள் நிரப்பும் பணி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. திட்டமிட்டப்படி இன்று காலை 9.30 மணிக்கு ஏவப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை