பிளஸ் 2 தொழில்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தட்டச்சுத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இதில் தட்டச்சு செய்முறைத் தேர்வு எழுத்துத் தேர்வுகளில் ஒன்றாக நடத்தப்பட்டு வருகிறது. பிற தேர்வுகளைப் போல் இல்லாமல், இந்தத் தேர்வு, தட்டச்சு இயந்திரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால், பிற பாடங்களுக்கான விடைத்தாள் கட்டுகள் பெறப்பட்ட பிறகும் கூட, தட்டச்சுத் தேர்வு விடைத்தாள்களைப் பெற முடியாத நிலை இருந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, இந்தத் தேர்வை செய்முறைத் தேர்வுகளோடு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதனடிப்படையில், தட்டச்சுத் தேர்வை, பிற செய்முறைத் தேர்வுகளோடு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவிட்டுள்ளார்.
பிற தொழிற்கல்வி பாடங்களின் செய்முறைத் தேர்வுகள் போலவே, இந்தப் பாடப்பிரிவுக்கும் வினாத்தாள் அமைத்து 200 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்த வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை