Ad Code

Responsive Advertisement

ஆண் ஆசிரியர்கள் விவரம் சேகரிக்க உத்தரவு

 சிறுமியர் பாலியல் பலாத்கார சம்பவங்கள் எதிரொலியாக, பள்ளிகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்கள், ஊழியர்களின் முகவரி, மொபைல் எண், விரல் அச்சு ஆகியவற்றை சேகரிக்கும்படி, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பலாத்கார குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில், முதல்வர் சித்தராமையா சமீபத்தில், ஐந்தாம் வகுப்புக்குட்பட்ட பள்ளிகளில், பெண் ஆசிரியர்களையே நியமிப்பதாக அறிவித்தார். மேலும், அனைத்து பள்ளிகளிலும், ஆண் ஆசிரியர்களின் முகவரி, புகைப்படம், விரல் அச்சு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மைசூரு நகர போலீஸ் கமிஷனர், அங்குள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். மேலும், ஆசிரியர்களின் முகவரியை, நேரில் சென்று விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement