''நாம் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்பதை, அரசு பள்ளி மாணவர்கள் உணர வேண்டும்,'' என, 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசினார்.'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் மாலை நிகழ்ச்சியில், எழுத்தாளர் ரமேஷ் பிரபா பேசியதாவது:
நீங்கள், பிளஸ்2 படிக்கும் போது, உங்களை தவிர, உங்களை சுற்றி உள்ள அனைவரும், 'நீ இந்த ஆண்டு, பிளஸ் 2 தானே' என, பரபரப்பு ஆவார்கள்.தேர்வு நெருங்கும் போது தான், லேசாக ஒரு பயம் வரும். கஷ்டமான பாடங்களை, எப்படி எளிமையாக படிக்கலாம் என்ற அணுகுமுறையை சொல்லி தருவது தான், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்யின் நோக்கம்.அரசு பள்ளியில் படிக்கு நாம், தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட முடியுமா என்ற, தாழ்வு மனப்பான்மை எப்போதும் உண்டு.எத்தனை பெரிய தனியார் பள்ளியாக இருந்தாலும், அரசு அங்கீகாரம் பெற்றது என, இருக்கும்.
அது இருந்தால் தான், அவர்களுக்கே அங்கீகாரம். அப்போது, அரசே நடத்தும் பள்ளியை, எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.அரசு பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் சாதனைகள் பேசப்படுவதில்லை. நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்.வணிகவியல் மாணவர்கள் ஆகிய நீங்கள் தான், நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்க போகிறீர்கள். நமக்கு இருக்கும் வாய்ப்பை கண்டுபிடிக்க வேண்டியது, நம் பொறுப்பு.
இவ்வாறு, அவர் பேசினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை