Ad Code

Responsive Advertisement

சிறப்பாசிரியர்களுக்கு பயிற்சி நிறைவு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை உள்ளடக்கிய திட்டத்தின் கீழ், சிறப்பாசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

மாநில அளவிலான இந்தப் பயிற்சியில் 60 பேர் பங்கேற்றனர். இந்தப் பயிற்சியில் குழந்தைகளுக்குத் தேவையான சிறப்புக் கல்வி, மதிப்பீடு, ஆலோசனை, இயன்முறை பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பார்வைத் தூண்டல், கல்வி- தொழில் சார்ந்த பயிற்சி, நுண் தசை இயக்கப் பயிற்சி போன்றவை தொடர்பாக ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த ஆசிரியர்கள் மாவட்ட அளவில் சென்று அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். மாநிலம் முழுவதும் 1,36,267 மாற்றுத் திறனுடைய குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement