மத்திய அரசின் உத்தரவுப்படி, கர்நாடகாவிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அடுத்த ஆண்டிலிருந்து, மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை பெரும்பாலான பள்ளிகள் வரவேற்றுள்ளன.கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாவது பாடமாக, ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.
பள்ளிகள் தயார்:கடந்த அக்டோபர், 27ம் தேதி, ஜெர்மன் மொழிக்கு பதிலாக, சமஸ்கிருதத்தை பயிற்றுவிக்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்த, கர்நாடகா கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும்தயாராகி வருகின்றன. மத்திய அரசின் முடிவை, கர்நாடகா சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் சீனிவாச வரகேதி வரவேற்று கூறியுள்ளதாவது:நம் மொழியை பயிற்றுவிப்பதற்கு பதில், அந்நிய மொழியை பயிற்றுவிப்பது தேவையற்றது.
இதேபோன்று, பெரும்பாலான கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர்களும், ஆசிரியர்களும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.இதற்கு எதிராக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், 'ஜெர்மனி மொழிக்கு பதில், சமஸ்கிருதம் மொழியை, விருப்ப பாடமாக மாற்றுவதில், அரசு அவசரம் காட்ட தேவையில்லை. இந்த மாற்றம், குறிப்பாக, எட்டாம் வகுப்பு மாணவர்களை பாதிக்கும். இந்தாண்டு, செமஸ்டர் முடியும் வரை, அரசு, பொறுமையாக இருந்து இருக்கலாம்' என்றனர்.
மறுபரிசீலனை:பெங்களூரு பல்கலைக்கழக, அயல் மொழி துறை முன்னாள் தலைவர் ஹிரேசி கூறியதாவது:அடுத்தாண்டில் சமஸ்கிருத மொழியை துவக்குவது குறித்து, அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். திடீரென, இப்படியொரு முடிவை, அரசு எடுப்பது, அயல் நாட்டு மொழிகளை கற்பதில், மாணவர்களின் ஆர்வத்தை குறைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை