Ad Code

Responsive Advertisement

இன்று முதல் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா

கற்றலில் குறைபாடுடையோர் ஆதரவு சங்கம் சார்பில் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா நவம்பர் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியது:

கற்றலில் குறைபாடுடையோரின் திறமைகளை வெளிக்கொண்டுவரவும், கற்றலில் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் கற்றலில் குறைபாடுடையோர் வார விழா நடைபெறுகிறது.

இந்தநிகழ்ச்சியின் தொடக்கமாக நவம்பர் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தியாகராய நகர் வாணி மகாலில் கற்றலில் குறைபாடு குறித்த குழு விவாதம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 25-ஆம் முதல் 29-ஆம் தேதி வரை தியாகராய நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நெருப்பை பயன்படுத்தாமல் சமையல் செய்தல், கதை சொல்லுதல், நடனம், இசை ஆகிய போட்டிகள் நடைபெறும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement