புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் சிகிச்சைப் பெறும் மருத்துவமனைகள் பட்டியலில், புதிதாக, 22 மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த திட்டம், 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நான்கு ஆண்டுகளுக்கு, நான்கு லட்சம் ரூபாய்க்கு, மருத்துவ சிகிச்சைப் பெறலாம். ஊழியர்கள் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்கு வசதியாக, 635 மருத்துவமனைகள், காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டன.
மேலும், 22 மருத்துவமனைகளை சேர்க்க, திட்டம் அங்கீகாரக்குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. அதை ஏற்று, ஏற்கனவே உள்ள, 635 மருத்துவமனைகளுடன், புதிதாக, 22 மருத்துவமனைகளை இணைத்துக் கொள்ள, அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை கள் விவரத்துடன் கூடிய அரசாணை, www.tn.gov.in என்ற அரசு இணையதளத்தில், 'கவர்மென்ட் ஆர்டர்ஸ்' என்ற தலைப்பின் கீழ் உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை