ஆதிதிராவிடர், கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
மனு விவரம்: நான் சீர்மரபினர் பிரிவுக்கு உள்பட்ட மறவர் வகுப்பைச் சேர்ந்தவன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 98 மதிப்பெண் பெற்றுள்ளேன். இடைநிலை ஆசிரியர் பணியில் நியமிக்கப்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்நிலையில் கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளில் 64 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 669 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பிரமலை கள்ளர் சமூகத்தினருக்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட, அருந்ததியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை அளித்து பணிகள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு 1993-இல் தமிழக அரசு நிறைவேற்றிய இடஒதுக்கீடு சட்டத்துக்கு முரணாக உள்ளது. நான் 98 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதும்,ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பால் எனக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி டி.ராஜா, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2014 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அறிவிப்பாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும் மனுவுக்கு 10 நாள்களில் பதிலளிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர், பள்ளிக் கல்வித்துறை செயலர், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை