ரயில்வே வாரியத்தின் தேர்வில் தமிழக இளைஞர்களின் 2 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இது குறித்து தொழிற்சங்க பொதுச் செயலாளர் அ. ஞானசேகரன் கூறியது:
ரயில்வே தேர்வு வாரியம் ஆர்.ஆர்.பி., ஆர்.ஆர்.சி. சார்பில் ஊழியர் தேர்வுக்கான விண்ணப்பம் கோரப்பட்டதில், சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் தமிழக இளைஞர்களுடையவை.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 70 சதவீத வேலைவாய்ப்பு கேட்டு போராடி வரும் நிலையில் இவ்வளவு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
எஸ்.சி., எஸ்.டி. தொழிலாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ரயில்வே துறையில் தனியார்மயத்தை அனுமதிக்கக் கூடாது. இதைக் கண்டித்து தொடர்ந்து போராடுவோம் என்றார் ஞானசேகரன்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை