சிவகங்கை;=== அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்களுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக", கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 187 அங்கன்வாடி பணியாளர், 20 குறுமைய பணியாளர், 188 உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கல்வி
பிரதான, குறுமைய அங்கன்வாடி பணியாளருக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது : 01.10.2014ல் 25 முதல் 35க்குள். விதவைகள், ஆதரவற்றவர்கள், உடல் ஊனமுற்றோர். உதவியாளர் பணிக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது: 01.10.2014ல் 20 முதல் 40. விதவை, ஆதரவற்றோர், ஊனமுற்றவர்களுக்கு உரிய வயது சலுகை உண்டு.விதவை, ஆதரவற்றோர் தாசில்தாரிடமும், ஆதரவற்ற விதவை ஆர்.டி.ஓ.,விடம் சான்று பெற வேண்டும். பணியிடத்தில் இருந்து 10 கி.மீ., சுற்றளவிற்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்
பிரதான அங்கன்வாடி பணியாளர் 2,500 - 5,000 தர ஊதியம் ரூ.500 இதர படிகள். குறு அங்கன்வாடி பணியாளர் 1,800 - 3300 , தர ஊதியம் ரூ.400 பிற படிகள். உதவியாளர்கள் ரூ.1,300 - 5,000, தர ஊதியம் ரூ.300 பிற படிகள். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை நவ.,17 மாலை 5க்குள் அந்தந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் தபாலிலோ, நேரிலோ ஒப்படைக்கவும். விண்ணப்பத்தை இணையதளத்திலும், டவுண்லோடு செய்யலாம், என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை