Ad Code

Responsive Advertisement

தரம் உயர்த்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அக்.30, 31-இல் கலந்தாய்வு

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்களுக்கு அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

நிகழாண்டில் (2014-15) 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்காக அனுமதிக்கப்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள், ஏற்கெனவே காலியாக உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.30) நடைபெற உள்ளது.

இந்தப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் வழங்கும் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (அக்.31) நடைபெற உள்ளது. இந்தப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 450 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் அன்றைய தினமே நடைபெற உள்ளது.

அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இணையதளம் மூலம் காலை 10 மணி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement