ஐஐடி முதலாமாண்டு மாணவர்கள் எழுதிய ஆங்கில தேர்வில் 239 பேர் தோல்வியடைந்துள்ளனர். மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ஐஐடியில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ&மாணவிகள் படித்து வருகின்றனர். பொதுவாக ஐஐடிக்களில் ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தப்படுவதால், அங்கு படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருப்பார்கள். எனினும், அனைத்து ஐஐடிக்களும் மாணவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் தேர்வுகளை நடத்தி மாணவர்களின் ஆங்கில திறனை தெரிந்து கொண்டு அவர்களுக்கு ஆங்கில பயிற்சி மற்றும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில், ஒருவார்த்தை கேள்விகள், கட்டுரைகள், ஆங்கில இலக்கண திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும்.
இதுவே, மாணவர்களின் மொழித்திறன் குறைவதற்கு காரணமாக அமைகிறது. இதை கருத்தில் கொண்டே ஐஐடி சார்பில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஐஐடி மாணவர் ஒருவர் கூறுகையில், ‘பள்ளிகளில் பொதுவாக மொழிப்பாடங்களுக்கு அதிக அக்கறை காட்டுவதில்லை. நான் பள்ளியில் படிக்கும் போது, எனது பெரும்பாலான மொழிப்பாட வகுப்புகளின் போது அறிவியல் ஆசிரியரோ அல்லது கணித ஆசிரியரோ வந்து அவரது பாடத்தை எடுப்பார். மொழிப்பாடங்களை மனப்பாடம் செய்ய சொல்லுவார்கள் அவ்வளவுதான். மேலும், ஐஐடி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு மொழிப்பாட மதிப்பெண்களை கேட்பதில்லை. மாறாக கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்தே மதிப்பீடு செய்கின்றனர். இதனால், மொழித்திறன் குறைகிறது,’ என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை