துணை மருத்துவப் பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்கியுள்ளது. செவிலிய உதவியாளர் உள்ளிட்ட 16 துணை மருத்துவ சான்றிதழ் படிப்புகள், கண் மருத்துவம் உள்ளிட்ட 8 பட்டயப் படிப்புகள் என மொத்தம் 24 படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னை கிங் மருத்துவ ஆராய்ச்சி மையத்திலும் விண்ணப்பங்களைப் பெறலாம்.
விண்ணப்பங்களை www.tnhealth.org, www.tngov.in ஆகிய இணையதளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப விநியோகத்துக்கான கடைசித் தேதி அக்டோபர் 13 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
படிப்பில் சேர தகுதி உள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் அக்டோபர் 24-ஆம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் இறுதி வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை