ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால், கவுன்சலிங்கில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நேற்று மதியமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, கவுன்சலிங்கில் பணி இடங்களை தேர்வு செய்தவர்கள் நேற்று மதியமே அந்தந்த மையங்களுக்கு சென்று பணி நியமன உத்தரவுகளை பெற்றுக் கொண்டு உடனடியாக பணியில் சேரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையின் மூலம் கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான கவுன்சலிங் நடத்தப்பட்டது. இந்த கவுன்சலிங்கில் கலந்து கொண்டு பணியிடங்களை தேர்வு செய்தவர்கள் அனைவருக்கும் இன்று (25ம் தேதி) பிற்பகல் முதல் அந்தந்த கவுன்சலிங் மையங்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது. எனவே அனைத்து ஆசிரியர்களும் அந்தந்த மையங்களுக்கு சென்று பணி நியமன ஆணைகளை பெற்று, பணி நியமனம் பெற்ற பள்ளிகளில் உடனடியாக பணியில் சேரவேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்று மதியம் அந்தந்த கவுன்சலிங் மையங்களுக்கு ஆசிரியர்கள் சென்று பணி நியமன ஆணைகளை பெற்றுச் சென்றனர். இருப்பினும், பலருக்கு கடந்த வாரமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு விட்டதால் அவர்கள் யாரும் மையங்களுக்கு வரவில்லை. இதையடுத்து பணி நியமன உத்தரவு பெற்றவர்கள் இன்று முதல் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை