இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில், பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்களுக்கு இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையால், கடந்த ஒன்றாம் தேதி முதல் 5-ம் தேதி வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இக்கலந்தாய்வில் பங்கேற்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்கள் அனைவருக்கும் இன்று பிற்பகல் முதல் சம்பந்தப்பட்ட கலந்தாய்வு மையங்களில் பணிநியமன ஆணை வழங்கப்படவுள்ளது. அனைத்து பணிநாடுநர்களும் சம்பந்தப்பட்ட மையத்திற்குச் சென்று பணிநியமன ஆணையை பெற்று, உடனடியாக பள்ளிகளில் பணியேற்குமாறு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியிடம் தேர்வு செய்த பணிநாடுநர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு, அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் சென்று ஒதுக்கீட்டு மற்றும் நியமன ஆணைகளை பெற்றுக்கொள்ளலாம் என தொடக்க கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை