தாழ்த்தப்பட்டோர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தமிழகத்தில், கல்வியில் 69 சதவீத இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? என்பதைத் தெளிவுப்படுத்தும் மனுவை இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது, ஹர்ஷிணி சார்பில் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.எம். விஜயன் ஆஜராகி, "இந்தியா முழுவதும் கல்வியில் 50 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு கடைப்பிடிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிட்டார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், "தமிழகத்தில் எந்த அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது? என்பதை மாநில அரசு விளக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி, "69 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவாகும். ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இதுபோன்ற இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, அவற்றை ஆராய்ந்து பதிலளிக்க கால அவகாசம் தேவை' என்றார்.
அவரது கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கல்வியில் 69 சதவீத இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். அந்த மனுவுக்கு மனுதாரர் தரப்பில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை