தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டதுபோல, இங்கும் தொடங்கப்பட்டகலந்தாய்வில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே. தமிழரசு முன்னிலையில் நடைபெற்றஇந்தக் கலந்தாய்வில் 47 பேர் கலந்து கொண்டனர். ஆங்கிலம், கணிதம்,இயற்பியல், வேதியியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல்,தாவரவியல், விலங்கியல், உயிரியல், நுண்ணுயிரியல், மனை அறிவியல் ஆகியபாடங்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது.
பள்ளிக்கல்வி இயக்ககத்திலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 49 பணியிடங்கள் காலியாக இருப்பதாக இணையவழி மூலம் தகவல் வந்தது. இதில், இணையவழி மூலம் பணியிடத்தைத் தேர்வு செய்த 34 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை