Ad Code

Responsive Advertisement

PG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை(மாவட்டத்திற்குள்)

திருவண்ணாமலையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வில் 97  பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது. இதற்கான  ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொ.பொன்னையா வழங்கினார்.
ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு திருவண்ணாமலையில் நடைபெற்ற முதுநிலைப்  பட்டதாரி ஆசிரியர் நேர்முகத் தேர்வில் 119பேருக்கு பணி ஒதுக்கப்பட்டது. இதில் 114 பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். 5 பேர் கலந்து கொள்ளவில்லை. இதில் 97பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. 
வெளிமாவட்டங்களில் பணி நியமன ஆணை பெற விரும்புவோருக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement