அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு, கையெழுத்து பயிற்சி ஏடு, ஓவியப் பயிற்சி ஏடு, நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ?ம் வகுப்பு முதல், ?ம் வகுப்பு வரை படிக்கும், 45.76 லட்சம் பேருக்கு, கையெழுத்து பயிற்சி ஏடு. முதல் வகுப்பு முதல், ?ம் வகுப்பு வரை படிக்கும், 63.18 லட்சம் பேருக்கு, ஓவியப் பயிற்சி ஏடு. பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு வழங்கப்படும். இதற்கு, 8.10 கோடி ரூபாய் செலவாகும் என, கடந்த மாதம், 30ம் தேதி, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தலைமை செயலகத்தில், நேற்று, இத்திட்டங்களை, முதல்வர் துவக்கி வைத்தார். ஏழு மாணவர்களுக்கு, கையெழுத்து பயிற்சி ஏடு, ஓவியப் பயிற்சி ஏடு, பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேட்டை வழங்கினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை