நல்ல பள்ளிக்கு என்ன தேவை என்பது தொடர்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரின் கருத்துக்களை அறியும் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கம் அரிமா சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் 5 ஆசிரியர் குழுவினர், 5 மாணவர் குழுவினர் பங்குபெற்று நல்ல பள்ளி தொடர்பான தங்களது கருத்துகளைத் தெரிவிக்க உள்ளனர்.
அதோடு, பெற்றோர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரும் நல்ல பள்ளிக்கு என்ன தேவை என்பது தொடர்பாக தங்களது கருத்துக்களை கட்டுரை வடிவில் இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம்.
இதில் சிறந்த 100 கட்டுரைகள் "நல்ல பள்ளிக்கு என்ன தேவை' என்ற புத்தகமாக தொகுக்கப்படும். சிறந்த 10 கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
பொதுமக்கள் தங்களது கட்டுரைகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: gurudevobhava2014@gmail.com.
மேலும் தகவலுக்கு 93810-29179 என்ற செல்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை