தனியார்கள் சட்டக் கல்லூரிகளைத் தொடங்க தடை விதிக்கும் சட்ட மசோதா பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.
மசோதாவில் குறிப்பிட்டப்பட்டுள்ள விவரம்:
குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை வழங்குவதற்கு ஏதுவாக, மாநிலத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையில் அரசின் சார்பிலேயே சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவினை எடுத்துள்ளது. பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு தனியார்களால் (அறக்கட்டளைகள், சங்கங்கள்) குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை அளிக்க முடியவில்லை.
மேலும், சட்டக் கல்லூரிகளை நல்லமுறையில் திறம்பட தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியவில்லை என்பது கடந்த கால அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. எனவே, தனியாக ஒரு சட்டத்தை இயற்றுவதன் மூலம், மாநிலத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் நிறுவுவதை தடை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது என மசோதாவில் குறிப்பிட்டுள்ளது.
எங்கெங்கு கல்லூரிகள்: தமிழகத்தில் சென்னை, சேலம், கோவை, நெல்லை உள்ளிட்ட 9 இடங்களில் அரசின் சார்பில் சட்டக் கல்லூரிகள் உள்ளன. மேலும், வி.ஐ.டி., சாஸ்த்ரா, சவீதா ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் சார்பிலும் சட்டப் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. சட்டப்பேரவையில் மசோதா நிறைவேறுவதன் மூலம், தமிழகத்தில் இனி இந்த கல்லூரிகளைத் தவிர்த்து வேறு தனி நபர்கள் புதிதாக கல்லூரிகளைத் தொடங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை