சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கு:
சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று சிபிஎஸ்இ பள்ளிகளின் தலைவர், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் சமஸ்கிருதம் அனைவருக் கும் தாய் மொழி என்று தவறான தகவலை அளித்துள்ளனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது
மனுதாரர் சார்பாக வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, சமஸ்கிருத வாரம் கொண்டாட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், தற்போது மத்திய அரசு சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்தரவிட்டுள்ளது, அடுத்த முறை மற்ற மொழிகளுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கலாம். எனவே இந்த உத்தரவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பு கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை