ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி, இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல், முல்லை நகரை சேர்ந்தவர் சசிகுமார், 37. இவர், இந்துசமய அறநிலையத் துறையில், டைப்பிஸ்டாக உள்ளார். இவரது மனைவி இளவரசி, 28, எம்.எஸ்சி., முடித்துள்ளார். இவர்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இளவரசி, அரசு வேலைவாய்ப்பிற்காக, ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியுள்ளார். முதல் முறை தோல்வி அடைந்த அவர், இரண்டாவது முறையும் தேர்ச்சி பெறவில்லை. இதனால், மனமுடைந்த இளவரசி, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, தன் வீட்டில், துப்பட்டாவில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை