Ad Code

Responsive Advertisement

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு - ஆசிரியைக்கு தண்டனை: பெற்றோர் ஆவேசம்

கும்பகோணம் பள்ளி தீவிபத்தில், வகுப்பறையை பூட்டிச் சென்ற ஆசிரியை தேவி, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் மிகுந்த ஆவேசம் அடைந்துள்ளனர். பள்ளியில் தீவிபத்து நடப்பதற்கு முன்பாக, ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, ஆசிரியை தேவி, வகுப்பறையை பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளார்.
அவர் வகுப்பறையை பூட்டிச் செல்லாமல் இருந்திருந்தால் பல குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்பது பெற்றோர்களின் ஆதங்கமாக உள்ளது. இந்நிலையில், இவ்வழக்கில் இருந்து ஆசிரியை தேவி விடுவிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களை ஆவேசப்படுத்தியுள்ளது. அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement