Ad Code

Responsive Advertisement

பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி

கடந்த ஆண்டு மொத்தம் 1.05 லட்சம் பொறியியல் கல்லூரி இடங் கள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தன. இந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் அதிக மாகும் என்றே தெரிகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் முடியவிருக்கும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்குப் பிறகு, மொத்தம் எத்தனை இடங்கள் காலியாக இருக்கும் என்று உத்தேசமாகக்கூட கூறமுடியாத நிலையில் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் உள்ளனர்.


குறைந்தபட்சம் 100 கல்லூரி களுக்கு கணிசமான எண்ணிக் கையில் மாணவர்கள் வரவே இல்லை என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. பொறியி யல் கல்லூரிகளில் மாணவர்கள் சேராமல் ஏராளமான இடங்கள் காலியாக இருப்பது புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்கிறது. ஆரம்பத்தில் மிகவும் குறைவாக இருந்த காலியிடங் கள் எண்ணிக்கை இப்போது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு 572 பொறியியல் கல்லூரிகள் மாண வர்களைச் சேர்த்துக்கொண்டன. சில கல்லூரிகளில் 12க்கும் குறைவான மாணவர்களே சேர்ந் தனர். தொழில்நுட்பக் கல்விக் கான அனைத்திந்திய கவுன்சில்தான் இந்த நிலைமைக்குக் காரணம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement