ஆத்தூர் அருகே, மின்னல் தாக்கி இறந்த கூலித் தொழிலாளி மகளுக்கு, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைத்துள்ளது. கட்டணம் செலுத்த வழியின்றி, படிப்பை தொடர முடியாமல் தவித்து வருகிறார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, வளையல் காடு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்; கூலித் தொழிலாளி. இவர்,2007, ஜூன் 3ல், மின்னல் தாக்கி இறந்தார். அதன்பின், அவரது மனைவி சுசீலா, 39, கூலி வேலை செய்து, தன் மகள் இந்துமதியை, 17, அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்குமேல் படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில், அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன், பிளஸ் 2 வரை, தமிழ் வழியில், கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக படித்தார். பிளஸ் 2 பொதுத் தேர்வில், 1,135 மதிப்பெண் பெற்றார். இவரது மருத்துவ படிப்புக்கான கட்- ஆப் மார்க், 195.5 ஆக இருந்ததால் கலந்தாய்வில் கலந்து கொண்டார். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில், இந்துமதிக்கு, எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது. ஜூலை 3ல், மருத்துவ கல்லூரியில் சேர அனுமதி கடிதமும் வந்துள்ளது. மருத்துவ படிப்பு படிக்க, கல்வி கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் செலுத்த வழியின்றி மாணவி பரிதவித்து வருகிறார். நமது நிருபரிடம், இந்துமதி கூறியதாவது: டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்ததால், 1,135 மதிப்பெண் எடுத்தேன். மருத்துவ கட் ஆப் மார்க், 195.5 ஆக இருந்ததால், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்துள்ளது. கல்வி கட்டணம், 12,500 ரூபாய் உட்பட, ஆண்டுக்கு, 75 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்பதால், ஐந்தாண்டுக்கு செலவு செய்து, டாக்டர் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. படிப்புக்கு உதவி கிடைத்தால், மேற்கொண்டு டாக்டர் படிப்பை தொடருவேன். டாக்டராகி, என்னை போல் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்வேன். படிக்க உதவி செய்பவர்கள், 94895 85853 என்ற மொபைல் போனுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை