Ad Code

Responsive Advertisement

அணையில் மூழ்கி மாணவர் பலி: ஆசிரியர்கள் 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 42 மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கிருஷ்ணகிரி அணைக்கு சுற்றுலா வந்தனர்.
இந்நிலையில் பத்மநாபன் (15) என்ற மாணவன் அணையின் மதகு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டான். போலீஸ் விசாரணையில் ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர் நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது.
இதையடுத்து சுற்றுலாவிற்கு அழைத்து வந்த ஆசிரியர்கள் ராஜசேகர், புவனேஸ்வரி மற்றும் பாலபரமேஸ்வரி ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement