Ad Code

Responsive Advertisement

தமிழ்நாட்டில் 10 நகரங்களில் அம்மா மருந்தகம்



மாண்புமிகு அம்மா அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவையும் அந்த வரிசையில் மக்களின் ஆதரவை பெற்றிருக்கின்றன. இப்போது மக்களுக்கு தேவையான மருந்துகளை மலிவு விலையில் வழங்குவதற்காக அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன.
ஏற்கனவே கூட்டுறவு துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள் புதிதாக தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 13–ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்து இருந்தார்.
முதல் கட்டமாக 7 மாவட்டங்களில் ரூ.1 கோடி செலவில் 10 அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன. இங்கு விற்பனை செய்யப்படும் மருந்துகளுக்கு 10 சதவீத விலை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
முதல்–அமைச்சர் மாண்புமிகு அம்மா நாளை (வியாழக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் இந்த அம்மா மருந்தகங்களை தொடங்கி வைக்கிறார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement