பகுதிநேர ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் ஆணையிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராதா விடுத்துள்ள அறிக்கை :
தமிழக முதல்வர் ஜெ., இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். பகுதி நேர ஆசிரியர்களாகிய நாங்கள் தேர்தல் பணிகளை செம்மையாக செய்தோம்.
லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பகுதி நேர ஆசிரியர்களை பல தலைமை ஆசிரியர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து முழுநேரப் பணி செய்ய வலியுறுத்துகின்றனர். மாத சம்பளம் 5 ஆயிரம் ரூபாயை போக்குவரத்துக்கே செலவிடுகிறோம். இதனால் குடும்பங்கள் வறுமையில் வாடிவருகிறது.
முதன்மை பாடங்களை கவனிப்பதற்கு ஏதுவான நிலை ஏற்படும் என்றுதான் சிறப்பு ஆசிரியர்களை அரசு நியமனம் செய்தது. மாணவர்களின் நலன் கருதியும் பகுதிநேர ஆசிரியர்களின் நலன் கருதியும் எங்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ராதா கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெ., இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 16 ஆயிரத்து 549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். பகுதி நேர ஆசிரியர்களாகிய நாங்கள் தேர்தல் பணிகளை செம்மையாக செய்தோம்.
லோக்சபா தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பகுதி நேர ஆசிரியர்களை பல தலைமை ஆசிரியர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து முழுநேரப் பணி செய்ய வலியுறுத்துகின்றனர். மாத சம்பளம் 5 ஆயிரம் ரூபாயை போக்குவரத்துக்கே செலவிடுகிறோம். இதனால் குடும்பங்கள் வறுமையில் வாடிவருகிறது.
முதன்மை பாடங்களை கவனிப்பதற்கு ஏதுவான நிலை ஏற்படும் என்றுதான் சிறப்பு ஆசிரியர்களை அரசு நியமனம் செய்தது. மாணவர்களின் நலன் கருதியும் பகுதிநேர ஆசிரியர்களின் நலன் கருதியும் எங்களை முழுநேர ஆசிரியர்களாக பணியமர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ராதா கூறியுள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை