தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 30,380 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் பெற வெள்ளிக்கிழமை கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 447 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றனர். இதுவரை மொத்தம் 30,380 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் (31,912 மாணவர்கள்) ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 1,532 பேர் குறைவாக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்க (ஜூன் 2) கடைசி நாளாகும். இதுவரை மொத்தம் 20,662 மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ஆம் தேதி வெளியிடவும், முதல் கட்ட கலந்தாய்வை ஜூன் 18-ஆம் தேதி தொடங்கவும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,172 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தன.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் பெற வெள்ளிக்கிழமை கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மொத்தம் 447 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றனர். இதுவரை மொத்தம் 30,380 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுடன் (31,912 மாணவர்கள்) ஒப்பிடும்போது, இந்த ஆண்டு 1,532 பேர் குறைவாக விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அளிக்க (ஜூன் 2) கடைசி நாளாகும். இதுவரை மொத்தம் 20,662 மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ஆம் தேதி வெளியிடவும், முதல் கட்ட கலந்தாய்வை ஜூன் 18-ஆம் தேதி தொடங்கவும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை