உடுமலை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளி மாணவியருக்கு, 2013 கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார சூழ்நிலையால், பெண்களின் கல்வி தடைபடக்கூடாது என்ற நோக்கத்தில், மாநில அரசு, பள்ளி கல்வித்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மூன்று முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மூன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை ஒரு பெண் குழந்தைக்கு, 500 ரூபாயும், ஆறாம் வகுப்பு குழந்தைகளுக்கு 1,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 1,850 ரூபாயும் வழங்கப்படுகிறது.
உடுமலை ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பெண் குழந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், 2013-14 கல்வியாண்டிற்கான 7 லட்சத்து 91 ஆயிரத்து 650 ரூபாயை உடுமலை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை